காதலின் இசை
Wednesday, December 8, 2010 by Unknown
[caption id="attachment_524" align="alignleft" width="279" caption="kaadhalin isai"]
[/caption]
நீ பாடுகையில்
இசைக்கருவிகளின் சொற்களுக்கு
இசையமைக்கிறதுன் குரல்.
*
ஒரே நேரத்தில்
இரு கருவிகளை
இசைக்க முடியாதென
வீணை வாசிக்கையில்
வளையல் கழற்றுகிறாயா?
*
உன் விரல்களில் வழியும் இசையினை
மெய்மறந்து செவிமடுத்தவன்,
உன் பார்வையில் வழியும் இசையினை
செவிமறந்து விழிமடுக்கிறேன்.
*
நெடுநாட்களாய் நீ வாசிக்காத வீணையொன்று
இசை மறக்காமலிருக்க வாசித்துக்கொண்டே இருக்கிறது
உனது பெயரை.
*
அத்தனை அன்பிலும்
முழுமையடையாத நம் நட்பின் கவிதையை
நிறைவு செய்ய வருகிறது.. காதலின் இசை.

நீ பாடுகையில்
இசைக்கருவிகளின் சொற்களுக்கு
இசையமைக்கிறதுன் குரல்.
*
ஒரே நேரத்தில்
இரு கருவிகளை
இசைக்க முடியாதென
வீணை வாசிக்கையில்
வளையல் கழற்றுகிறாயா?
*
உன் விரல்களில் வழியும் இசையினை
மெய்மறந்து செவிமடுத்தவன்,
உன் பார்வையில் வழியும் இசையினை
செவிமறந்து விழிமடுக்கிறேன்.
*
நெடுநாட்களாய் நீ வாசிக்காத வீணையொன்று
இசை மறக்காமலிருக்க வாசித்துக்கொண்டே இருக்கிறது
உனது பெயரை.
*
அத்தனை அன்பிலும்
முழுமையடையாத நம் நட்பின் கவிதையை
நிறைவு செய்ய வருகிறது.. காதலின் இசை.
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
காதலின் இசை... ரம்மியமாக இருக்கிறது...
எப்பவாவது எழுதுறீங்க.... ஆனா பின்னிடுறீங்க...கலக்கல் ரசித்தேன்... வ்
‘வளையலைக் கழற்றுவது’ டாப்பு :)
காதல் கவிதை தேன் பருகினேன்.
நன்றி சிசு!
நன்றிங்க தமிழ்ப்பறவை. எப்பவாவது தான் நேரம் அமைகிறது. என்ன செய்ய?
outstanding .....,
நன்றிங்க சிவா!
Thanks!