காதலின் இசை

[caption id="attachment_524" align="alignleft" width="279" caption="kaadhalin isai"]kaadhalin isai[/caption]

நீ பாடுகையில்
இசைக்கருவிகளின் சொற்களுக்கு
இசையமைக்கிறதுன் குரல்.

*

ஒரே நேரத்தில்
இரு கருவிகளை
இசைக்க முடியாதென
வீணை வாசிக்கையில்
வளையல் கழற்றுகிறாயா?

*

உன் விரல்களில் வழியும் இசையினை
மெய்மறந்து செவிமடுத்தவன்,
உன் பார்வையில் வழியும் இசையினை
செவிமறந்து விழிமடுக்கிறேன்.

*

நெடுநாட்களாய் நீ வாசிக்காத வீணையொன்று
இசை மறக்காமலிருக்க வாசித்துக்கொண்டே இருக்கிறது
உனது பெயரை.

*

அத்தனை அன்பிலும்
முழுமையடையாத நம் நட்பின் கவிதையை
நிறைவு செய்ய வருகிறது.. காதலின் இசை.
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

8 comments:

    காதலின் இசை... ரம்மியமாக இருக்கிறது...

    எப்பவாவது எழுதுறீங்க.... ஆனா பின்னிடுறீங்க...கலக்கல் ரசித்தேன்... வ்
    ‘வளையலைக் கழற்றுவது’ டாப்பு :)

    On December 30, 2010 at 8:22 AM P Shiva said...

    காதல் கவிதை தேன் பருகினேன்.

    நன்றி சிசு!

    நன்றிங்க தமிழ்ப்பறவை. எப்பவாவது தான் நேரம் அமைகிறது. என்ன செய்ய?

    outstanding .....,

    நன்றிங்க சிவா!

    Thanks!