கண்ணாடி(ய) கவிதை

*

உலக அழகியின் புகைப்படத்தை
உன் வீட்டில்
கண்ணாடி என்பீர்களா?

*

உனதழகை
நீ பார்க்கும்பொழுது
பிரதிபலிக்கிற கண்ணாடி
நீ பார்க்காதபொழுது
உள்வாங்கிக் கொள்கிறது தெரியுமா?

*

உன் வீட்டுக் கண்ணாடிக்கு
தினமும் உனதழகை ரசிக்கும்
அதிர்ஷ்டம் தந்த மச்சங்களாய் மின்னுகின்றன
நீ ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டுகள்.

*

நீ வரைந்த கண்ணாடி ஓவியங்களின்
அழகை விசாரிக்கும்பொழுது
உன் 'கண்'ணாடியதை எப்படி ஓவியமாக்க?

*

உன்னை அழகாய்க் காட்டியதற்காக
நீ முத்தமிட்ட கணத்திலிருந்து
தன்னை அழகாய்க் காட்டிக்கொள்ள தவிக்கிறது
உன் வீட்டுக் கண்ணாடி.
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

5 comments:

    On August 5, 2011 at 8:47 AM ramya said...

    கலக்கிடீங்க கவிஞரே

    ரம்யமான கவி

    On October 7, 2011 at 9:59 AM nalina lavanya said...

    s

    On October 7, 2011 at 10:00 AM nalina lavanya said...

    அருட்பெருங்கோ,
    உங்களுக்குப் பின்னூட்டம் போட்டால் போர்னோ சைட் என்று வருகிறதே ஏன்?

    On October 8, 2011 at 9:00 AM nalina lavanya said...

    பார்த்துவிட்டீர்களா? இப்போதும் போர்னோ சைட் ஆர் யூ ஷ்யூர் டு கண்டின்யூ என்று வருகிறது.