மார்கழிப்பாவை 4

ஐப்பசியிலும்
கார்த்திகையிலும்
உன்னை நனைத்து
மகிழ்ந்த மழை,
மார்கழியில் மட்டும்
உனது கோலங்களை
அழிக்க மனமில்லாமலும்,
உன்னைத் தீண்டாமல்
இருக்க முடியாமலும்
பட்டும் படாமல் தொட்டுப் போகிறது...
மார்கழிப் பனியாக!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

1 comments:

    On December 23, 2011 at 6:16 AM Sdbalamurugan said...

    I really like all these paavai series.. :) keep it going..