காதல்வரவு

வெறுமையாய் உருகும்
எனது வைகறைக் கனவுகளெல்லாம்
நீ வந்து உறையத்தான்.

விருப்பமின்றி தொடரும்
ஓரிரு கெட்டப்பழக்கங்களும்
உனது விருப்பத்தின்பொருட்டு விட்டொழிக்கத்தான்.

வெள்ளைத்தாளில் கருப்பில் வரைந்த
எனது கோட்டோவோயங்கள் எல்லாம்
உனக்குப் பிடித்த வண்ணங்களால் நிரப்பத்தான்.

அரைப்பக்கம் மட்டுமே எழுதப்படும்
எனது நாட்குறிப்புகளெல்லாம்
உனதுரையால் பூர்த்தி செய்யத்தான்.

காதல் வழியும்
எனது கற்பனைக் கவிதைகளெல்லாம்
நீ வந்து நிஜமாக்கத்தான்.
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

11 comments:

    On May 11, 2011 at 4:49 AM cool said...

    Hmmmmmm romba naal kaluchu eluthureenga pola....
    But asusually U hav done a gr8 JOB...

    பெரும்பான்மையானோருக்கு பொருந்திப்போவது இந்த கவிதைகளின் வெற்றி

    பெரும்பான்மையானோரில் ஒருவன்

    தங்களின் கவிதைக்காக காத்திருப்போருக்கு நல்லதொரு கவிதை வரவு !!!

    On May 23, 2011 at 9:29 AM s.usha said...

    super pa.

    welcome welcome welcome to kathal kavithai

    super super super ethu than kavithai

    On June 15, 2011 at 12:26 AM prakash said...

    suvaika suvaika sarkaraium then pola inikum...
    athu pol aval mutham sathamila uthadugaludan....

    நண்பரே அருமை..

    aval varuvala.........................

    காதலுக்கு என்ன ஒரு அழுத்தம் அதனால் பலரின் வாழ்கை திருத்தம்....,.

    intha paguthi romba supper