16 சனவரி 2010 :

பொங்கல் திருவிழா அன்று கரூரில் வீட்டருகில் நடக்கும் நடனப்போட்டியில் கலந்துகொள்வதற்காக பயங்கரமாக பயிற்சியெல்லாம் செய்துகொண்டு வந்திருந்தாள் மித்ரா. இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும்போதே மித்ராவுக்கு கண்ணைக்கட்ட, ஒரு மணி நேரம் கழித்து அவள் மேடையேறிய போது மொத்தமாக தூக்கத்தில் இருந்தவள், பாட்டுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவளைப் போல ஆடாமல் நின்று வெறுப்பேற்ற... மைக்கில் அறிவிக்கும் ஆள் வேறு 'பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று அறிவித்து இன்னும் கடுப்பேற்ற... அடுத்த பொங்கலில் மித்ராவை எப்படியாவது ஆடவைக்க அண்ணி போட்ட சபதத்தின் விளைவு :

16 சனவரி 2011 :
[flashvideo filename=video/Mithra-Video/Janani_Mithra_Dance_conv.flv /]
இந்த ஆண்டு moral support க்கு ஜனனியும் சேர்ந்துகொள்ள எப்படியோ பரிசும் வாங்கி விட்டார்கள். அந்த துணிச்சலில் அடுத்த ஆண்டு இருவரும் தனித்தனியாக களமிறங்கப் போகிறார்களாம் :)
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

பொங்கல் கவிதை

[caption id="attachment_543" align="aligncenter" width="600" caption="பொங்கல் கவிதை"]பொங்கல் கவிதை[/caption]

ஆத்து தண்ணி ஆள இழுக்க வாய்க்காத்தண்ணி காலு வழுக்க
கேணிமேட்டுத் தொட்டியில குளிச்சுத்தான் பழகிப்புட்ட...
ஒம் மேலுபட்டத் தண்ணி தோப்பெல்லாம் பாயுது
தென்னங் கொலையெல்லாம் செவப்பாத்தான் காய்க்குது.

வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

புத்தாண்டு வாழ்த்து

சக்தி வாய்ந்த என் முத்த‍மொன்று
உனது கன்ன‍த்தில் விழுந்து வெடிக்கிறது.
க‌லவரம் பிற இடங்களுக்கு பரவாமலிருக்க‍
செவ்வ‍ரி இதழ்களை அனுப்புகிறாய்...நிகழ்விடத்துக்கு!

வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

காதலின் இசை

[caption id="attachment_524" align="alignleft" width="279" caption="kaadhalin isai"]kaadhalin isai[/caption]

நீ பாடுகையில்
இசைக்கருவிகளின் சொற்களுக்கு
இசையமைக்கிறதுன் குரல்.

*
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

தீபாவளி வாழ்த்து

தீபாவளி வாழ்த்து



[caption id="attachment_510" align="aligncenter" width="566" caption="தீபாவளி வாழ்த்து"]தீபாவளி வாழ்த்து[/caption]



[caption id="attachment_511" align="aligncenter" width="508" caption="தீபாவளி வாழ்த்து"]தீபாவளி வாழ்த்து[/caption]



[caption id="attachment_512" align="aligncenter" width="508" caption="தீபாவளி வாழ்த்து"]தீபாவளி வாழ்த்து[/caption]



[caption id="attachment_513" align="aligncenter" width="506" caption="தீபாவளி வாழ்த்து"]தீபாவளி வாழ்த்து[/caption]



[caption id="attachment_514" align="aligncenter" width="508" caption="தீபாவளி வாழ்த்து"]தீபாவளி வாழ்த்து[/caption]



[caption id="attachment_515" align="aligncenter" width="508" caption="தீபாவளி வாழ்த்து"]தீபாவளி வாழ்த்து[/caption]

வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

தேவதைகளின் தேவதை

[caption id="attachment_501" align="aligncenter" width="600" caption="தேவதைகளின் தேவதை"]தேவதைகளின் தேவதை[/caption]
வெள்ளைத் திரைமூடி
தாளுக்குள் ஒளிந்திருந்த தேவதை,
வண்ணத்தூரிகையால் நீ திரைவிலக்கியதும்,
உன் பேரழகைக் கண்ட அதிர்ச்சியில்
ஓவியமாக உறைந்து போகிறாள்!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
சில நாட்களுக்கு முன் நடந்த தொலைபேசி உரையாடல் :

அப்பா : உன் பிறந்த நாளுக்கு என்ன கிஃப்ட் ஜனனி வேணும்?
ஜனனி : தாத்தா, கிஃப்ட் எல்லாம் சர்ப்ரைசாதான் தரணும், முன்னாடியே எல்லாம் கேட்கக்கூடாது!
அண்ணன் : சர்ப்ரைஸ் எல்லாம் இல்ல ஜனனி உனக்கு என்ன வேணும்னு சொன்னாதான் முன்னாடியே வாங்கிட்டு வர முடியும்.
ஜனனி : சரி மாமா. எங்கிட்ட ஒரு வாட்ச் தான் இருக்கு. எனக்கு இன்னொரு வாட்ச் வாங்கித் தாங்க!
நான் : ஜனனி, நான் என்ன வாங்கி தரட்டும்?
ஜனனி : மாமா, நீங்க எதுவும் வாங்கித் தர வேண்டாம் மாமா. என் பெர்த்டே க்கு நீங்க வந்தீங்கன்னா அதான் மாமா எனக்கு கிஃப்ட். எப்போ மாமா வருவீங்க?
பதில் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

அயல்நாட்டுப் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் அனுபவித்திருக்கும் நிகழ்வுதான்.
அவளுக்கென வாங்கி அனுப்ப முடியாமல் கிடக்கும் பரிசுப்பொருட்களை வெறித்தபடி உருவாக்கியதுதான் இந்த வீடியோ பதிவு.

மாமாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜனனி!

[flashvideo filename=video/HappyBirthdayJanani.flv /]
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.