குழந்தை கவிதை

ஒரு கையில் புத்தகப்பையும்
மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு
பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது
புடவையணிந்த குழந்தையொன்று.
இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு
அதட்டிக்கொண்டே வருகிறாள்
சீருடையணிந்த தாயொருத்தி!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான்.
காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள்.
காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்.
[caption id="attachment_451" align="alignright" width="225" caption="சிவ சக்திசிவ சக்தி"]சிவ சக்தி[/caption]

வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அக்கா : ( புது வீடு கட்டிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் போட்டிருந்த கொட்டகை மீது நிறைய சுரைக்காய் காய்த்திருப்பதைப் பார்த்து ) இந்த சுரைக்காயெல்லாம் கடைல வாங்கினா முப்பது ரூபா நாற்பது ரூபா சொல்லுவாங்க…
ஜனனி : அப்படியாம்மா? அப்படின்னா நாம வீடு கட்டினதும் மொட்டமாடில சுரக்கா செடி வச்சிடலாம். சுரக்காயெல்லாம் வித்து வித்து நாம பணக்காரங்களா ஆகிடலாம்..
அக்கா : அடிப்பாவி.. நீ நல்லா படிச்சு பெரியாளாவன்னு பார்த்தா சுரக்கா வித்து பெரியாளாகலாங்கற…
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

கிளி ஜோதிடம்

மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன்.
ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள்.
“சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன்.
(கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக)
என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்பாம்பு படம் வந்திருந்தது.
[caption id="attachment_440" align="alignright" width="300" caption="கிளி ஜோதிடம்"]கிளி ஜோதிடம்[/caption]
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
வேளச்சேரி தரமணி சாலையை ஒட்டியிருந்த
ப்ளாட்பாரக் குடிசைகள் ஓரிரவில் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன.
அடுத்தடுத்த நாட்களில்
புத்தம்புதிய தார்ச்சாலை மினுமினுப்புடன் அகண்டு நீண்டிருந்தது..
ஆறேழு ஆட்டுக்குட்டிகளை விழுங்கிய
மலைப்பாம்பு படுத்திருப்பதைப் போல![caption id="attachment_434" align="alignright" width="300" caption="மித்ரா-ஜனனி"]மித்ரா-ஜனனி[/caption]
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
ஊருக்கு புதிய பேருந்துநிலையம் வந்ததிலிருந்து நிறைய மாற்றங்கள்.
பிரபலமான உணவகங்களும் விடுதிகளும் புதிய பேருந்துநிலையமருகே இடம்பிடித்தன.
மிகப்பெரிய விளம்பரப் பலகைகளும், கட்டவுட்டுகளும் கூட இடம்பெயரத் துவங்கின.
ஊருக்குள் போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டிருந்தது. [caption id="attachment_430" align="alignright" width="300" caption="பேருந்து நிலையம்"]பேருந்து நிலையம்[/caption]
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

போடா கருவாயா

அலமு பிறந்ததுமே எனக்குதானென அம்மாச்சி சொன்னாளாம்.
சித்திரைத் திருவிழாவுக்கு வந்திருந்த பெரியம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டார்கள்.
கேட்டதிலிருந்து எனக்கு ஒட்டப்பல் அலமு தெத்துப்பல் சிரிப்பழகியாகக் தெரிந்தாள்.
அம்பாளுக்கு பால்குடம் எடுத்துவரும்போது அவளருகில் போய் கேட்டேன்
‘என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியா?’
‘போடா கருவாயா’ எனத் திட்டிவிட்டாள்.

[caption id="attachment_421" align="alignright" width="300" caption="போடா கருவாயா"]போடா கருவாயா[/caption]


வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.