தேவதைகளின் தேவதை

[caption id="attachment_501" align="aligncenter" width="600" caption="தேவதைகளின் தேவதை"]தேவதைகளின் தேவதை[/caption]
வெள்ளைத் திரைமூடி
தாளுக்குள் ஒளிந்திருந்த தேவதை,
வண்ணத்தூரிகையால் நீ திரைவிலக்கியதும்,
உன் பேரழகைக் கண்ட அதிர்ச்சியில்
ஓவியமாக உறைந்து போகிறாள்!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
சில நாட்களுக்கு முன் நடந்த தொலைபேசி உரையாடல் :

அப்பா : உன் பிறந்த நாளுக்கு என்ன கிஃப்ட் ஜனனி வேணும்?
ஜனனி : தாத்தா, கிஃப்ட் எல்லாம் சர்ப்ரைசாதான் தரணும், முன்னாடியே எல்லாம் கேட்கக்கூடாது!
அண்ணன் : சர்ப்ரைஸ் எல்லாம் இல்ல ஜனனி உனக்கு என்ன வேணும்னு சொன்னாதான் முன்னாடியே வாங்கிட்டு வர முடியும்.
ஜனனி : சரி மாமா. எங்கிட்ட ஒரு வாட்ச் தான் இருக்கு. எனக்கு இன்னொரு வாட்ச் வாங்கித் தாங்க!
நான் : ஜனனி, நான் என்ன வாங்கி தரட்டும்?
ஜனனி : மாமா, நீங்க எதுவும் வாங்கித் தர வேண்டாம் மாமா. என் பெர்த்டே க்கு நீங்க வந்தீங்கன்னா அதான் மாமா எனக்கு கிஃப்ட். எப்போ மாமா வருவீங்க?
பதில் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

அயல்நாட்டுப் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் அனுபவித்திருக்கும் நிகழ்வுதான்.
அவளுக்கென வாங்கி அனுப்ப முடியாமல் கிடக்கும் பரிசுப்பொருட்களை வெறித்தபடி உருவாக்கியதுதான் இந்த வீடியோ பதிவு.

மாமாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜனனி!

[flashvideo filename=video/HappyBirthdayJanani.flv /]
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

குழந்தை கவிதை

ஒரு கையில் புத்தகப்பையும்
மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு
பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது
புடவையணிந்த குழந்தையொன்று.
இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு
அதட்டிக்கொண்டே வருகிறாள்
சீருடையணிந்த தாயொருத்தி!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
கடவுளைக் கண்டுபிடித்தது காட்டுமிராண்டி என்றான்.
காதலைக் கண்டுபிடித்ததும் காட்டுமிராண்டிதான் என்றாள்.
காட்டுமிராண்டித்தனம் எனக்கும் பிடிக்குமென நாத்திகம் நழுவினான்.
[caption id="attachment_451" align="alignright" width="225" caption="சிவ சக்திசிவ சக்தி"]சிவ சக்தி[/caption]

வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அக்கா : ( புது வீடு கட்டிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் போட்டிருந்த கொட்டகை மீது நிறைய சுரைக்காய் காய்த்திருப்பதைப் பார்த்து ) இந்த சுரைக்காயெல்லாம் கடைல வாங்கினா முப்பது ரூபா நாற்பது ரூபா சொல்லுவாங்க…
ஜனனி : அப்படியாம்மா? அப்படின்னா நாம வீடு கட்டினதும் மொட்டமாடில சுரக்கா செடி வச்சிடலாம். சுரக்காயெல்லாம் வித்து வித்து நாம பணக்காரங்களா ஆகிடலாம்..
அக்கா : அடிப்பாவி.. நீ நல்லா படிச்சு பெரியாளாவன்னு பார்த்தா சுரக்கா வித்து பெரியாளாகலாங்கற…
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

கிளி ஜோதிடம்

மருதமலை படிகளில் இறங்குகையில் பார்த்தேன்.
ஐந்தாறு கிளி ஜோசியக்காரர்கள் இருந்தார்கள்.
“சரவணன் B.A” என்று அட்டை வைத்திருந்தவரைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன்.
(கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதறிக)
என் பெயருக்கு கிளி எடுத்த சீட்டில் இரட்டைப்பாம்பு படம் வந்திருந்தது.
[caption id="attachment_440" align="alignright" width="300" caption="கிளி ஜோதிடம்"]கிளி ஜோதிடம்[/caption]
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
வேளச்சேரி தரமணி சாலையை ஒட்டியிருந்த
ப்ளாட்பாரக் குடிசைகள் ஓரிரவில் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன.
அடுத்தடுத்த நாட்களில்
புத்தம்புதிய தார்ச்சாலை மினுமினுப்புடன் அகண்டு நீண்டிருந்தது..
ஆறேழு ஆட்டுக்குட்டிகளை விழுங்கிய
மலைப்பாம்பு படுத்திருப்பதைப் போல![caption id="attachment_434" align="alignright" width="300" caption="மித்ரா-ஜனனி"]மித்ரா-ஜனனி[/caption]
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.